தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் வெளியிட்டிரு | Healer Baskar Followers
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதியில்லை” என்ற சுற்றறிக்கைக்கு எதிராக, நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நம் வேண்டுகோளை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு இமெயில் மூலம் அனுப்புவோம்.
கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு மனுவினை மெயிலில் அனுப்புங்கள் …
1. கீழுள்ள கடிதத்தை அப்படியே நகல் எடுத்து, மெயிலில் பேஸ்ட் செய்து, உங்கள் பெயரை கீழே இணைத்துக் கொள்ளுங்கள்.
2. இயற்கை ஆர்வலர், சித்தா, இயற்கை மருத்துவர் போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் பொது நபராக இந்த மெயிலை அனுப்புங்கள்.
3. நம் கருத்தில் உடன்பாடுள்ள நண்பர்கள், ஆதரவாளர்கள் என அனைவரையும் மெயில் அனுப்புமாறு சொல்லுங்கள்.
4. இதற்கான பலன் என்னவிதமாக இருந்தாலும், நமது கருத்து பரவலாக இருக்கிறது என்ற உண்மையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக இந்த இயக்கத்தை நாம் மேற்கொள்கிறோம்.
5. உங்கள் பெயரை மெயிலில் குறிப்பிடும் போது, உங்கள் ஊர் பெயரையும், மாவட்டத்தையும் சேர்த்து குறிப்பிடுங்கள்…
6. Subject கட்டாயத் தடுப்பூசி சுற்றறிக்கை குறித்து..
மெயில் ஐடி.:
cmcell@tn.gov.in
https://docs.google.com/document/d/1h8uqze3D9SJqtY2y87aSPLz-F4qtfGWo579cZ8BqBec/edit?usp=drivesdk