இப்போது ஒரே மின்னஞ்சல் மூலமாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மா | The National Reform Movement Channel
இப்போது ஒரே மின்னஞ்சல் மூலமாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மாவட்ட நடுவர்களுக்கும் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் உருவாகி கொடுத்துள்ள சாட்சிய சட்டம் படியாக ஆவணங்கள் கோரும் கடிதத்தை (தற்போதைக்கு ஆங்கில மொழியில் மட்டும்) அனுப்பும் வசதியை ஏற்படுத்தி உள்ளோம். விரைவில் பிற மொழிகளிலும் அனுப்பும் வசதியை ஏற்படுத்தி விடுவோம்.
இதனைப் பயன்படுத்தி அனுப்புவோர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திற்கு மட்டும் தனித்தனியாக தேர்ந்தெடுத்து மின்னஞ்சலை அனுப்பினால் போதும்.
அதாவது இதற்கு முன் முப்பத்தி எட்டு மின்னஞ்சல்கள் அனுப்பிய நிலையில், இப்போது மூன்றே மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பி விடலாம் என்பதுதான் விஷயம்.
இந்தியா நம் நாடு இல்லையா?
நீங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பயணம் மேற் கொள்ள மாட்டீர்களா?
இந்தியா முழுவதும் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இந்த கடிதத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உடனே அனுப்புவார்கள் என்று நம்புகிறோம்.