2021-11-04 17:19:25
ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டு டோஸ் தடுக்கா தடுப்பு ஊசி போட்டதாக சான்றிதழ் வாங்கிக் கொண்டு பேசாமல் வேலையை பார்க்கலாம் என்று, அதை செய்து கொண்டிருக்கும் அதிமேதாவிகளுக்காக இந்தப் பதிவு.
உங்களைப் போன்றவர்களின் செயலால் ஏற்படும் விளைவுகளில் சில பின்வருமாறு:
நீங்கள் நேர்மையாக நடந்து கொள்ளாமல் உங்கள் சந்ததிகளையும், மற்றவர்களையும் அதையே செய்ய வழிகாட்டி சமுதாயச் சீர்கேடு தொடர்ந்து நடக்க காரணமாகிறீர்கள்.1. லஞ்சம் கொடுத்து போலி சான்றிதழ் வாங்குவது ஒரு குற்றம்.
2. ஒரு குற்றத்தை செய்ய மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறீர்கள்.
3. உங்களுக்கு போடப்படாத ஊசி மருந்தை மற்றவர்களுக்கு விற்று ஊழல் செய்ய வாய்ப்பு அளித்து உள்ளீர்கள்.
4. உங்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஊசிமருந்துக்கான பணம் விரயம் ஆக்கப்படுகிறது.
5. தடுக்கா ஊசி போடாமலேயே நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், ஆனால் அரசும், மருந்து கம்பெனியும், தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கும். இதனால் தடுப்பூசி சிறப்பாக வேலை செய்கிறது என்பதான ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு அளிக்கிறீர்கள்.
6. தடுப்பூசி செலூத்தாமலேயே, தடுப்பூசி செலுத்தியதாக உங்களைப் போன்றவர்கள் போலிச் சான்றிதழ் வாங்கியதால் தான் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முறைகேட்டை தடுக்க போகிறோம் என்ற பெயரில் தடுப்பூசி குத்திக் கொண்ட அனைவருக்கும் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் பணி முடுக்கிவிட வாய்ப்பு அளிக்கிறீர்கள்.
7. தடுப்பூசி போடாதவர்கள் தான் இப்படி போலியாக சான்றிதழ் வாங்கி நோய் பரப்புகிறார்கள் என்ற பிம்பத்தை உறுதிப்படுத்த வாய்ப்பு அளிக்கிறீர்கள்.
ஒரு தவறான செயலால் ஏற்படும் சங்கிலி தொடர் விளைவுகள் மோசமான பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தும் என்று உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் செய்வது சட்டவிரோதமான செயல் மட்டுமல்ல, சமூக விரோத செயல் என்பதை உணர்வீர்கள்.
5.6K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 14:19